×

நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தியவர் கைது சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் போதை ஏறியதும் இன்னொரு ரவுண்டு

கே.வி.குப்பம், அக்.31: கே.வி.குப்பத்தில் போதை ஏறியதும் குவாட்டர் பாட்டிலை வாங்கி வந்து, நடுரோட்டில் அமர்ந்து மது அருந்திய மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரில் காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பகல் நேரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆசாமி போதையில் திடீரென நடுரோட்டில் அமர்ந்தார். தொடர்ந்து தனது பாக்ெகட்டில் வைத்திருந்த குவார்ட்டர் பாட்டிலை திறந்து வைத்து நடுரோட்டிலேயே குடிக்க ஆரம்பித்தார். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டே வாகனங்களிலும், நடந்தும் சென்றனர். சில பெண்கள் அவரை கடிந்து கொண்டே சாலையினை கடந்து சென்றனர். மேலும் இதனை கண்ட அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் விசாரித்ததில், அவர் சீதாராமபேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர்(56), என்பது தெரியவந்தது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கரின் மனைவி இறந்து சில மாதங்களான நிலையில் அடிக்கடி இதுபோன்று மது அருந்திவிட்டு, போதை ஏறியதும், மீண்டும் மதுபானம் வாங்கி சாலையில் சென்று அமர்ந்து குடிப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

The post நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தியவர் கைது சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் போதை ஏறியதும் இன்னொரு ரவுண்டு appeared first on Dinakaran.

Tags : KV Kuppam ,
× RELATED பண்ணை தீ விபத்தில் 6,200...